குழந்தைப்பேறு கிடைக்க செய்யும் பாரம்பரிய வீட்டு மருத்துவம்
குழந்தைப்பேறு கிடைக்க செய்யும் பாரம்பரிய வீட்டு மருத்துவம்
யாம் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் தல மரங்களும் தமிழ் மருத்துவமும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்த போது கிடைத்த தரவுகளின் அடிப்படையில், பல பாரம்பரிய மருத்துவர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களுடைய பாரம்பரிய மருத்துவம் சார்ந்த வழிமுறைகளை, ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் மருத்துவத் தாவர ஆராய்ச்சிகளின் விளைவாக இவ்வரிய மருத்துவ விசயங்களைத் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
சாதாரண மக்களும், தங்களது உணவு பழக்க வழக்கங்களின் அடிப்படையில் இம் மருத்துவத்தை மேற்கொள்ளும் வகையில் பெண்களுக்கான குழந்தைப்பேறு மருத்துவம் சார்ந்த வழி முறைகளை அனைவரும் அறிந்து பயன்பெற இவ்வரிய விஷயங்களைத் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக பெண்களுக்கு இருக்கக்கூடிய கருப்பைப் பூச்சி, கிருமிகள் ஒழியவும், நீர்க்கட்டிப் பிரச்சனைகள் தீரவும், தரமான கரு முட்டை உற்பத்திக்கும், மாதவிடாய்ப் பிரச்சினைகள் தீரவும், பெண் மலடு நீங்கவும் கிராமப்புறங்களில் மூலிகை பெயர்களை மற்றவர்களுக்குத் தெரியாமல், அந்த மூலிகையை அரைத்து மாதவிடாயின் போதும் அல்லது மாதவிடாய் வந்த மூன்றாவது நாளில் இருந்து ஐந்தாவது நாள் வரையும் மூலிகை உருண்டைகளை வெறும் வயிற்றில் ஈரத் துணியுடன் குளித்து வரச் சொல்லி அதை சாப்பிடக் கொடுப்பார்கள்.
அது என்ன மூலிகை? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அது நம்மைச் சுற்றி இருக்கும். நாமெல்லாம் அறிந்த மூலிகையின் இலைகளைத்தான் மிகவும் ரகசியமாக வைத்திருந்தார்கள். அந்த ரகசியமான மூலிகைகளை எல்லாம் நாம் இப்போது இந்த பதிவிலே தெரிந்து கொள்ளப் போகிறோம்.
பூப்பெய்தாத பெண்களுக்கு சிறு நெருஞ்சில் வேரை எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு எடுத்து, அதிகபட்சமாக ஒரு மண்டலம் குடித்து வர விரைவில் பூப்பெய்தி பருவம் அடைவார்கள்.
2. பூப்பெய்தும் வயதை கடந்த பிறகும், அதாவது சுமார் 18 வயது, 19 வயது, 20 வயது என்று ஆகியும் பருவம் எய்தாத நிலையில் உள்ள பெண்களுக்கு ஓர் அற்புதமான மருந்து இருக்கிறது. 12 செம்பருத்திப் பூவுடன், மஞ்சள் சிறு துண்டு எடுத்து, ஒரு சிறிய கொப்பரை தேங்காய் துண்டு சேர்த்து, அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரையில் சாப்பிட்டுவர பருவம் எய்தி விடுவார்கள். இது போன்று ஒன்பது செவ்வாய்க்கிழமை சாப்பிட வேண்டும் .
நாலாவது அல்லது ஐந்தாவது வாரத்திலேயே பருவமெய்தி விடுவார்கள். இது நான் அனுபவத்தில் கண்ட மருத்துவமுறை. இத்துடன் அவர்களுக்கு அஸ்வகந்தி லேகியம் அல்லது அமுக்கரா சூரணம் கொடுத்துவர விரைவில் பருவம் எய்துவார்கள்.
5ஆம் அதிபதியும், ஆறாம் அதிபதியும் சேர்ந்து இருக்கும் பட்சத்தில் கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படும். மாதவிலக்கு 28 முதல் 32 நாட்களுக்குள் வரவேண்டும். வரவில்லை எனில் கர்ப்பப்பையில் நீர்கட்டி, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை கட்டிகள், பெலோபியன் டியூப் அடைப்பு, கிருமிகள் தொற்று போன்றவை ஏற்படும்.
இதனால் பாதிக்கப்படும் கூடிய ராசிகள் எவை எனில், நீர் ராசிகள் எல்லாம் பாதிக்கப்படும். பாவகம் என்று சொன்னால் ஏழாம் பாவகம், எட்டாம் பாவகம் ஆகும். காரக கிரகங்கள் சந்திரன், செவ்வாய் மற்றும் சனி ஆகும்.
எனது அனுபவத்தில் விருச்சிக லக்னம், விருச்சிக ராசி. துலா லக்னம், துலா ராசி காரர்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படுகிறது. மாதவிடாய் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும், உணவு பழக்கவழக்கங்கள் அடிப்படையிலும் ஆலோசனை வழங்கி வருகிறோம். இது குறித்து +91 90803 75278 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ் மருத்துவ ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். பாரம்பரிய சிறந்த சித்த மருத்துவ விருதாளர், மருத்துவ தாவர ஆராய்ச்சியாளர், குழந்தைப்பேறு சிறப்பு நிபுணர், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் ஸ்ரீரமணி மருத்துவ ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல தீராத நோய்களை தீர்த்து வைத்திருக்கிறார். ☎️+91 90803 75278.
தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More
கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More
ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More
புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More
ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More
கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More