இலக்கியம்

ஒரே இரவில் 4 கோடி பாடல்கள் எழுத ஆணையிட்ட மன்னன்

Published by
முனைவர் சண்முக திருக்குமரன்
Share

ஒருசமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றியது. உடனே தன் அரண்மனைப் புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என்று ஆணையிட்டார்.

நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்கு கோடிப் பாடல்கள் எழுதுவது? புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றார்கள்.

ஒளவையார்

அந்த சமயம் அங்கே வந்த ஒளவையார் புலவர்களைப் பார்த்து “என்ன வருத்தம்?” என்று கேட்டார். புலவர்களும் அரசனின் உத்தரவை சொல்லி நான்கு கோடிப்பாடல்களுக்கு எங்கு செல்வோம் என்று இழுத்தார்கள்.

அவ்வையார் புன்முறுவலுடன் “இவ்வளவுதானா, நான் எழுதித்தருகிறேன் நான்கு கோடி பாடல்கள். கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்” என்றுகூறி நான்கு பாடல்கள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுத்தார்.

புலவர்கள் தயங்கி நிற்க, ஒளவையார் “ஒவ்வொரு பாடலும் ஒருகோடி பொன் மதிப்புடையது சென்று உங்கள் மன்னனிடம் கொடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

ஒளவையார்

வியந்த மன்னன்

புலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசித்தார்கள் , மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் ஒளவையார்தான் இயற்றியிருக்க முடியும் என்பதனை உணர்ந்தார்.

Related Post

புலவர்களிடம் இந்தப்பாடலை இயற்றியது ஒளவையார் தானே என வினவ அனைவரும், ‘ஆமாம்.. ஒளவையார் இயற்றியதுதான்’ எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து ஒளவையாரை அழைத்தார். ஒளவையாருக்குப் பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினான் .

அந்த நான்குகோடி பாடல்கள்: எது என்பது தெரியுமா?


மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்.
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமை கோடி பெறும்
.

முதல் கோடி

ஒளவையாரின் நான்கு கோடியில் முதல் கோடி

  1. ‘மதியாதார்’ முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்.
    ‘நல்ல பண்புகளைக் கைக்கொள்ளாதவர்’ வீட்டிற்கு செல்லாதிருப்பது, கோடி பொன்னுக்கு சமம். ‘மதிக்காதவர்’ வீட்டுக்கு செல்லாமல் இருப்பது நலம் .

இரண்டாவது கோடி

  1. உண்ணீர் உண்ணீர் என்று ‘உபசரியார்’ தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்.
    உணவை அருந்த ‘அன்புடன் அழைக்காமல்’, வெறும் வாய்ச்சொல்லில் அழைப்போர் வீடுகளில், சாப்பிடாமல் இருப்பது கோடி பொன்னுக்கு சமம்.

மூன்றாவது கோடி

  1. கோடி கொடுத்தும் ‘குடிப்பிறந்தார்’ தம்மோடு கூடுதல் கோடி பெறும்.
    கோடி பொன்னைக் கொடுத்தாவது, ‘நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம்’ சேர்ந்து வாழ்வது, கோடிப் பொன்னுக்கு ஒப்பாகும்.

நான்காவது கோடி

  1. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய ‘நாக் கோடாமை’ கோடி பெறும்.
    கோடி பொன் கொடுப்பதாகச் சொன்னாலும், ‘சொன்ன சொல் மாறாமல்’ வாழ்பவன் கோடி பொன்னுக்கு சமம்.

இந்த நான்கு கோடிகளைக் கடைப்பிடித்தால் நாமும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடலாம். நல்ல பண்புகளே நல்ல மனிதர்களை உருவாக்க முடியும் அவ்வையார் நீதிக்கதைகள் எக்காலத்துக்கும் எல்லோருக்கும் பொருந்தும்…..என்பதில் சந்தேகமே வேண்டாம் ஒளவையின் தமிழ் அமுதத் தமிழ்.

View Comments

  • நான்கே வரிகளில் நான்கு வாழ்வியல் தத்துவங்கள்!

Recent Posts

கிளியோபாட்ரா-55 தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு

தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More

2 years ago

கிளியோபாட்ரா 54 கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு!

கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More

2 years ago

கிளியோபாட்ரா 53 ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை

ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More

2 years ago

கிளியோபாட்ரா-52 புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை

புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More

2 years ago

51 ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்..!

ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More

2 years ago

கிளியோபாட்ரா-50 ஆண்டனியின் பரிதாப முடிவு!

கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More

2 years ago