மலச்சிக்கல் தான் பல சிக்கலுக்கு காரணம்
மலச்சிக்கல் தான் பல சிக்கலுக்கு காரணம்.
ஒரு மனிதனை தினசரி சிக்கலில் சிக்க வைப்பது மலச்சிக்கல். மலச்சிக்கல் பல சிக்கல் தான். ஒரு மனிதனுக்கு மலம் சரியான நேரத்தில் வெளியேறாமல் தேங்கும்பொழுது பெருங்குடல் அதில் உள்ள கெட்ட நீரை உறிஞ்சி அது உடல் முழுக்க பரவி பல்வேறு நோய்களையும் உடல் வலிகளையும் கொண்டு வருகின்றது குறிப்பாக மூட்டு வலி வருவதற்கு மலச்சிக்கல் தான் மிக முக்கிய காரணமாகும்.
உடல் உழைப்பு சரிவர இல்லாததாலும், போதியஅளவு நீர் பருகாததாலும், பழங்கள் காய்கறிகள் (நார்ச்சத்து) சாப்பிடாதது, நடைபயிற்சி இல்லாதது, இரவில் ஆழ்ந்த தூக்கம் இல்லாதது, ஜீரணமாகாத உணவுகளைப் பதார்த்தங்களை தொடர்ந்து சாப்பிடுவது, நன்றாகப் பசித்து உணவை மென்று சாப்பிடாதது போன்ற காரணங்கள் மலச்சிக்கலுக்கான முக்கியமானதாக இருக்கிறது.
மலச்சிக்கல்தான் மூலநோயாக உரு எடுக்கின்றது. இறுதியாக அது சிலருக்கு குடல் புற்று நோயாகவும் மாறுகின்றது.
நீங்கள் மலம் இருக்கும்பொழுது முறையாக அமர்ந்து இருக்க வேண்டும். மலம் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். அதுவே பழுப்பு நிறத்திலோ, வேறு வண்ணங்களில் வெளிவந்தால் உடலில் வேறு ஏதோ பாதிப்பு இருப்பதாக அர்த்தம். அதேபோன்று அதிக துர்நாற்றமும் இருக்கக்கூடாது. அதிக துர்நாற்றம் இருந்தால் உங்களது உடலில் அதிக கழிவுகள் தேங்கி இருப்பதாக அர்த்தம்.
1, 8, 9அதிபதிகள் சேர்க்கை, 8-ல் ராகு, கேது சம்பந்தப்பட மலச்சிக்கல் ஏற்படுகிறது. 8-ல் சனி இருக்க, 8-ல் குஜன் பார்க்க மலச்சிக்கலுக்கான பிரச்சனைக்குரியவராக இருப்பர்.
தினம் ஒரு நாட்டுப்பழம், தினம் ஒரு கீரை எடுக்க நலம். இரவு படுக்க முன், கடுக்காய் பொடி அல்லது லேகியம் எடுக்க நலம் உண்டாகும். சிறப்பாக கோட் சில்வர் லேகியம் மிகச்சரியான தீர்வாக அமைகிறது.
மேலும், தூதுவளைக்காயை நன்கு உலர்த்தி தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டு வர நலம். நிலாவரை இலையை துவையலாய் அரைத்து இரவில் உண்டு வர தீரும். நுணா (மஞ்சணத்தி) வேரை குடிநீராக பயன்படுத்திக்குடித்து வர தீரும்.
கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்த காயம் சம அளவு இடித்து பொடி செய்து சுடுசாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட நலம். அகத்திகீரையை வாரம் ஒரு முறை சமைத்துண்ண தீரும்.
குல்கந்து சாப்பிட நலம். தினமும் ஒரு பப்பாளி சாப்பிட நலம்.
நிலாவரைச்சூரணம், திரிபலா சூரணம், கடுக்காய் லேகியம், கோட்சில்வர் லேகியம் எடுக்க சிறப்பான பலன் உண்டு.
தினம் ஒரு நாட்டுப்பழம், தினம் ஒரு கீரை எடுக்க நலம். இரவு படுக்க முன், கடுக்காய் பொடி அல்லது லேகியம் எடுக்க நலம் உண்டாகும். சிறப்பாக கோட் சில்வர் லேகியம் மிகச்சரியான தீர்வாக அமைகிறது.
மேலும், தூதுவளைக்காயை நன்கு உலர்த்தி தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டு வர நலம். நிலாவரை இலையை துவையலாய் அரைத்து இரவில் உண்டு வர தீரும். நுணா (மஞ்சணத்தி) வேரை குடிநீராக பயன்படுத்திக்குடித்து வர தீரும்.
கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்த காயம் சம அளவு இடித்து பொடி செய்து சுடுசாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட நலம். அகத்திகீரையை வாரம் ஒரு முறை சமைத்துண்ண தீரும்.
குல்கந்து சாப்பிட நலம். தினமும் ஒரு பப்பாளி சாப்பிட நலம்.
நிலாவரைச்சூரணம், திரிபலா சூரணம், கடுக்காய் லேகியம், கோட்சில்வர் லேகியம் எடுக்க சிறப்பான பலன் உண்டு.
மேலும் இதுபோன்ற எளிய மருத்துவ ஜோதிட ஆலோசனைகளைபெற +91 90803 75278 என்ற எண்ணில் அழைக்கலாம்.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ் மருத்துவ ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். பாரம்பரிய சிறந்த சித்த மருத்துவ விருதாளர், மருத்துவ தாவர ஆராய்ச்சியாளர், குழந்தைப்பேறு சிறப்பு நிபுணர், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் ஸ்ரீரமணி மருத்துவ ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல தீராத நோய்களை தீர்த்து வைத்திருக்கிறார். ☎️+91 90803 75278.
தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More
கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More
ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More
புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More
ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More
கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More