ஆண் மலடு: பாரம்பரிய உணவு மூலம் சரி செய்யலாம்

Published by
முனைவர் நா.ரமணி சேகர்
Share

ஆண் மலடு: பாரம்பரிய உணவு மூலம் சரி செய்யலாம்

அஸோஸ்பெர்மியா என்றால் என்ன? ஆண்களுக்கு ஒரு விந்து அணு கூட இல்லாத நிலைக்கு Azoospermia (No sperm count) என்று பெயர். இதற்கு ஆண் மலடு (Nil count) எனவும் அறிந்து கொள்ளலாம்.

உலக அளவில் 30 சதவீதம் பேர் ஆண் மலடாக உள்ளனர். திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் கருவுறாத நிலையின்போது அவசியம் விந்து பரிசோதனை செய்து கொள்ளுதல் நலம்.

ஆண் மலடு அறிகுறிகள்:

விந்து வெளியாவதில் சிரம நிலை ஏற்படும். தருவாயின் போது இப்பிரச்சினை ஏற்படலாம். ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் போதிய அளவு இல்லாத பட்சத்தில் பிரச்சினை வரலாம்.

அவர்களுக்கு விதைப்பையை இல்லாத நிலை, அல்லது ஒரு விதைப்பை இருத்தல் அல்லது விதைகள் சிறியதாகவோ அல்லது முழு வளர்ச்சி அடையாத நிலையிலும் கூட  இப்பிரச்சினை ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு விதைப்பையானது வெளியே தெரியாமல் அடிவயிற்று பகுதியில் மறைந்து காணப்படும். 

உணர்வு அல்லது உடல் உறவு சார்ந்த வேட்கை இல்லாதும் இதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. சிறிய அளவில் விந்தணு வெளியேற்றம் அல்லது சீழ்பிடித்த விந்து  அல்லது இது வெளியாவதற்கு சிரம நிலை இருக்கும் பட்சத்தில் இப்பிரச்சனை இருப்பதாக அறிந்து கொள்ளலாம்.

முடி கொட்டுதல் அல்லது குறைந்த முடி வளர்ச்சி உடையது கூட இதன் அறிகுறியாக அமையலாம். உடல் பருமன் கூட இப்பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.

காரணிகள்

மிகக் குறைந்த உடலுறவு இயக்கம் கூட ஒரு காரணியாக அமைய வாய்ப்புள்ளது. விதைப்பையில் அடிக்கடி வலி ஏற்படுவதால் (வெரிகோஸ் நரம்பு சுருள் பிரச்சனைகளால்) விந்து உற்பத்தி பாதிப்பு நிலை அடைந்து விந்து உற்பத்தி ஆகும் பணி பாதிப்பு அடைந்து இப்பிரச்சினைக்கு  காரணியாக அமைந்துள்ளது.

அணுக்கள் குறைபாட்டிற்கான காரணங்கள்:

புகை மற்றும் மது அருந்துவதாலும் விந்தணுக்கள் அழிக்கப்படுகிறது மற்றும் அணு உற்பத்தி குறைகிறது.  ஃபாஸ்ட் புட், ஜங்க் உணவுகள் தினமும் எடுப்பதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. உணவு வகையால் விந்தணு உற்பத்திக்கு  தேவைப்படும் சத்துகள் கிடைக்காமல் போய்விடுகிறது.

ஆண் மலடு, போதிய உறக்கம் இல்லாமலும் இரவு பணியால் ஏற்படும் சோர்வு அல்லது இரவு முழுவதும் செல்போன் பார்ப்பது போன்ற காரணங்களால் உடல் வெப்பம் அடைந்து உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. 

பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்து அல்லது லேப்டாப் மடியில் வைத்து பணிபுரிவதால் அணுக்கள் அழியக் காரணமாக இருக்கிறது. இறுக்கமான உள்ளாடை அணிவது மற்றும் குளிக்கும் போது வெந்நீர் பயன்படுத்துவதால் மிகச்சூடான வெந்நீரால் விதைப்பையிலுள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது.

நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் ஆன்டிடிரஸன் போன்ற சில மருந்துகளாலும் இப்பிரச்சினை வரக் காரணமாகிறது.

உணவு முறைகள்:

தினமும் சப்போட்டா பழம், செவ்வாழைப் பழம்,   தர்பூசணி பழம், மாதுளம் பழமும் இதில் ஏதாவது ஒரு பழம் எடுத்து வருவது நல்லது. 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒருமண்டலம் கீழாநெல்லி சாறு எடுத்து மோர் கலந்தோ அல்லது தனியாகவோ எடுத்து வருவது இந்த பிரச்சனைக்கு நல்ல ஒரு பலனைத்தரும். நீர் எவ்வளவு அதிகமாக குடிக்க வேண்டுமோ அந்த அளவு குடிக்க வேண்டும். போதிய அளவு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த மலச்சிக்கலை கவனிக்காத பட்சத்தில் அதனால் உற்பத்தி ஆகும் வாயு விதைகளில் ஏறி வலி கொடுக்க ஆரம்பிக்கலாம்.

ஜாதிக்காய், கசகசா இவற்றை அரைத்து பாலில் இட்டு, பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம். ரோஜா குல்கந்து சாப்பிட்டு வரலாம். தினமும் தயிர் எடுத்து வரலாம். இரவு நேரங்களில் திரிபலாசூரணம் எடுத்து வருவது மிக நல்லது.

பாரம்பரிய நாட்டு மருத்துவ தீர்வு:

1. குளிர் தாமரை தைலம்:

பொதுவாக உடல் உஷ்ணத்தினால் உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. இதனால் அல்லது உற்பத்தி ஆகாமல் இருக்கிறது. இந்த நிலை மாற உடல் உஷ்ணம் குறைய வேண்டும். இதற்கு தாமரை விதை மற்றும் குளிர் தாமரை இலையில் இருந்து தயாரிக்கப்படும் குளிர் தாமரை தைலம் உடலை குளிர்ச்சியாக்கி விந்தணுக்களை அதிக அளவில் பெருக வழி வகை செய்கிறது.

2. நாட்டுக்கோழி முட்டை:

ஆண் மலடு, பாரம்பரிய நாட்டுக் கோழி முட்டையானது குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டது. லெக்கான் கோழி முட்டை குஞ்சு பொரிக்காது. நாட்டுக்கோழி முட்டை மஞ்சள் கருவில் ஆண்களின் உயிரணுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் வல்லமை வாய்ந்தது.

இந்த நாட்டு கோழி முட்டை மஞ்சள் கருவுடன் அக்கிரகாரம் மற்றும் ஒரு சில கடை சரக்கைச் சேர்த்து தேன் கலந்து 5 நிமிடம் வேகவைத்து ஒரு இருபது நாட்கள் சாப்பிடுவதன் மூலம் உயிரணுக்களின் உற்பத்தியை பெருக்கலாம்.

3. நில் கவுண்ட் லேகியம்:

‘யுனானி’  முறைப்படி வங்க பற்பம், நிமிலை பற்பம், சிலாசத்து பற்பம், சீமை அமுக்கிரா, சப்ஜா விதை, ஏலரிசி, சாதிபத்திரி, சாலாமிசிரி, சுபேத் மிஸ்ரி, குரோசானி ஓமம், கிளிசராகுளோபரா, ரோஜா மொக்கு இன்னும் பலவிதமான நாட்டு கடைச் சரக்குகளைக்கொண்டு,  தேன் மற்றும் நாட்டு மாட்டு நெய் சேர்த்து லேகியமாகத்தயாரிக்கும் பட்சத்தில், உயிரணுக்கள் இல்லாத யாருக்கும் ஒரு நான்கைந்து மாதங்களில் ஒரு உயிரணுவாவது ஏற்படும்.  ஒர் உயிர் அணு  என்று வந்து விட்டால் அதன் பிறகு நமக்கு தேவைப்படும் அளவிற்கு உயிரணுக்களை உற்பத்தி செய்ய வாய்ப்புகள் உண்டு. 

ஜோதிட மருத்துவ காரணங்கள் :

‘அஸோஸ்பெர்மியா’ எனப்படும் ஆண் மலட்டிற்குக் காரணம் என்னவென்றால் சூரியன் மற்றும் சனியினுடைய சேர்க்கை அல்லது பார்வை தான் ஏதாவது ஒரு வகையில் இந்த சூரியன், சனி சேர்க்கை 5 ஆம் அதிபதியுடன் தொடர்பு ஏற்படும் பட்சத்தில் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

குரு பார்வை அல்லது சுபர்களின் பார்வை பெறும் பட்சத்தில் மருத்துவத்தின் மூலமாக குழந்தை பிறக்க அவர்களுக்கு வாய்ப்பு உண்டு. 

தீர்வு:

உலகம் தீர்வு காண இயலாத இந்த அசூஸ்பர்மியா ஆண் மலடு பிரச்சனைக்கு செயற்கை கருவூட்டல் தான் வழி என்கிற நிலையில் குறைந்தபட்சம் 7 மாதம் அதிகபட்சம் ஒரு வருட காலத்தில் பாரம்பரிய யுனானி மற்றும் நாட்டு மருத்துவ சிகிச்சை மூலம் உணவு சார்ந்த வழிமுறைகள் ஆலோசனை மூலம் உறுதியாக புத்திரப்பேறு குழந்தை பாக்கியம் உறுதி. ஆயிரக்கணக்கான தம்பதியினர் பலன் பெற்றிருக்கிறார்கள் என்பது எனது அனுபவப்பூர்வமான உண்மை. 

கணவன், மனைவி இருவரும் இணைந்து சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை பெறும் பட்சத்தில் ஆண் மலட்டிற்குக்கான விடிவு காலம் கிட்டும் என்பதில் ஐயமில்லை. மேலும் மருத்துவ ஆலோசனைகள் பெற +91 90803 75278 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Recent Posts

கிளியோபாட்ரா-55 தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு

தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More

2 years ago

கிளியோபாட்ரா 54 கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு!

கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More

2 years ago

கிளியோபாட்ரா 53 ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை

ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More

2 years ago

கிளியோபாட்ரா-52 புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை

புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More

2 years ago

51 ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்..!

ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More

2 years ago

கிளியோபாட்ரா-50 ஆண்டனியின் பரிதாப முடிவு!

கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More

2 years ago